அரசாங்க நிறுவனங்களில் மக்களிடம் இலஞ்சம் பெற முயற்சிக்கும் அதிகாரிகள் குறித்த இடத்தில் வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
மேல் மாகாணத்தை கேந்திர நிலையமாக கொண்டு இதற்கென பொலிஸ் பிரிவு செயற்பட்டு வருகிறது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இதன் தலைமை அதிகாரியாக செயற்படுகின்றார்.
புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சிலரும் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.
பொது மக்களிடம் இலஞ்சம் பெறுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பல நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.