3 மணி நேர சுற்றிவளைப்பு, 26 பேர் கைது

7 ad 1
7 ad 1

தெல்தெனிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது நீதிமன்ற பிடியாணை உத்தரவை புறக்கணித்து மறைந்திருந்த பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 3 மணி நேரம் 50 பொலிஸாரின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் தெல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.