ஈரான் இராணுவ தளபதியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

iran 1
iran 1

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் இராணுவ தளபதி குவாசம் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் மூலம் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் சுலைமானி, கொல்லப்பட்டார்.

அவரின் உடல் வைக்கப்பட்ட பெட்டி, திறந்த ஜீப்வண்டியில் பாக்தாத்தின் முக்கிய பகுதிகளில் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது .

இதில், ஈராக் பிரதமர் அடல் அப்துல் மஹ்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.