தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை – ஜனாதிபதியுடன் பேச கூட்டமைப்பு தீர்மானம்

tna
tna

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து பேச தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விரைவில் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.