ஹப்புத்தளை விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிவதில் தொடா்ந்தும் சிக்கல்

happutala 1
happutala 1

ஹப்புத்தளை விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிவதில் தொடா்ந்தும் சிக்கல் நிலவிவரும் நிலையில் நேற்றைய தினம் குறித்த பகுதியில் இரசாயன பகுப்பாய்வு நடாத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனுடன் விபத்தில் உயிரிழந்த விமான படை வீரர்கள் நால்வரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று காலை இலங்கை வான்படைக்கு சொந்தமான வை – 12 ரக இலகுரக உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானது.

ஹம்பாந்தோட்டை, வீரவில வானூர்தி தளத்தில் இருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பயணித்த வேளையிலேயே விபத்து இடம்பெற்றது.

இதேவேளை உயிரிழந்த வான்படை அதிகாரிகளின் சடலங்கள் இன்றைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.