ஈராக்கில் மற்றுமொரு விமானத் தாக்குதலை நடாத்திய அமெரிக்கா!

2 err
2 err

யுத்தமொன்றை ஆரம்பிக்க தாம் விருப்பம் இல்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அறிவிப்புச் செய்து சில மணித்தியாலங்களில் ஈராக்கில் மற்றுமொரு விமானத் தாக்குதலை அமெரிக்கா நடாத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் தளபதியை இலக்கு வைத்து அமெரிக்கா நேற்று மேற்கொண்ட  தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து, இந்திய, சீன, ரஷ்ய வெளியுறவுத்துறை என்பன கவலை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் வடக்கு பாக்தாத் பகுதியில் அமெரிக்க படைகள் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

ஈரான் ஆதரவாளர்கள் சென்ற அணிவகுப்பை குறிவைத்து அமெரிக்கா இந்த விமானத் தாக்குதலை நடத்தியதாகவும், இராணுவ தளபதி சுலைமானிக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு சென்று கொண்டிருக்கையில் அமெரிக்கா இன்று காலை இந்த  தாக்குதலை நடத்தியதாகவும் அத்தகவல்கள்  மேலும் தெரிவித்துள்ளன.