நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

rain
rain

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை தவிர்த்து கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

இதனிடையே, நாட்டை சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை படிப்படியாக குறைவடைவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.