வவுனியாவில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி!

44372f1b 8935 46f2 b595 d73d04748f54
44372f1b 8935 46f2 b595 d73d04748f54

வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும், 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்

c9879f31 0715 40cc a469 5e0bbe7ebbe2


வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்பட்ட போகஸ்வேவ மகா வித்தியாலயத்தில் இன்று (17.10) காலை பிரார்த்தனையின் போது காற்றின் காரணமாக மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து  பாடசாலை மாணவர்கள்  மற்றும் ஆசிரியர் மீது தாக்கியுள்ளது. 

c3afa095 1c3a 4434 b4b1 7a13074e9d6a


இதனால் பாதிப்படைந்தவர்களில் 12மாணவர்கள் பதவியா பிரதேச வைத்தியசாலையிலும் , 8 ஆசிரியர்கள் , 12 மாணவர்கள்  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும், 03 மாணவர்கள் மடுகந்த பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.