நாளை மறுதினம் (4) அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுவரி திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (4) இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.
அதன்காரணமாக அன்றைய தினம் நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.