ஓமந்தை கள்ளிகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற கப் ரக வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது .
குறித்த சம்பவம் இன்று (4) அதிகாலை 4 மணியளவில் ஓமந்தை ஏ 9 வீதி கள்ளிகுளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வாகனம் சட்டவிரோத மரங்களுடன் வவுனியா நோக்கிசென்ற நிலையில் கள்ளிக்குளம் பகுதியில் வீதியின் அருகில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதுண்டதாகவும் வாகன சாரதி தப்பியோடிவிட்டார் என ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.