மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டனர்.
இன்று(ஞாயிற்றுக்கிழடமை) முற்பகல் வேளையில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறி 12க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காய்ச்சலினால் சிறைச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதை தொடர்ந்து குறித்த கைதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைக் கைதிகள், நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சிறைக் கைதிகளின் போராட்டம் காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலைப் பகுதியில் பதற்றத்துடன் கூடிய நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.