முறிகண்டி வீதி விபத்தில் ஒருவர் பலி (மேலதிக செய்திகள்)

m3
m3

முல்லைதீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

ஏ-9 வீதியில் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே விபத்து இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் இன்று (5) இரவு 8.45 மணியளவில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளைஞன் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.