விசா அனுமதி பத்திரமின்றி தங்கியிருந்த சுவிசர்லாந்து நாட்டு பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு (5) 11.30 மணியளவில் ஹிக்கடுவ பொலிஸ் பிரிவின் மில்லன்கொடவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த இருவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.