அம்பாறை மாவட்ட ஊடகப்பிரிவு ஆரம்பம்

amparai 1
amparai 1

அம்பாறை மாவட்டச் செயலகத்திற்கான ஊடகப்பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ அலுவலகத்தை நேற்று (06) திறந்து வைத்தார்.

இது தொடர்பான நிகழ்வு அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

மாவட்ட செயலகத்தின் கீழ் செயற்படும் திணக்களங்கள், அரச அலுவலகங்கள் ஊடாக பொது மக்களுக்கு முன்னெடுக்கப்படும் சேவைகள், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விடயங்களை இந்த ஊடகப்பிரிவினூடாக அறிந்துகொள்ள முடியும்.