ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று

slfp
slfp

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய நாள் (7) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் மைத்திரபால சிரிசேன தலைமையில் காலை 10 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இரு அணிகளும் ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளது.

இருந்த போதும் இது தொடர்பில் பொதுஜன பெரமுனவினர் மாறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.