ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான விவாதம் இன்று

gottabaya2
gottabaya2

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 03ம் திகதி நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட அக்கிராசன உரை மீதான விவாதம் இன்று (07) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த விவாதத்தை எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் சபைத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இது தொடர்பான விவாதம் நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.