யாழ்.மாநகரசபையின் முதல்வரின் நடவடிக்கையைக் கண்டித்தும் குத்தகைகாரர்களின் செயற்பாடுகளைக் கண்டித்தும் யாழ்.கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
புதிதாக திறக்கப்பட்ட கல்வியங்காடு பொதுச் சந்தையை பொறுப்பேற்ற குத்தகையாளர்கள் சந்தையை சுகாதார ரீதியாக ஒழுங்காக சுத்தம் செய்வதில்லை, வரி அறவீட்டை இரண்டு மடங்காக உயர்தியுள்ளமை, மீன் சந்தைக்கான பாதையை விரிவுபடுத்தி தராமை.
அத்துடன் இன்னும் சில விடயங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை யாழ்.மாநகர சபை முதல்வர் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் முதலாம் திகதியிலிருந்தே சந்தை நடவடிக்கைகள் தொடங்கியிருந்தன.
சந்தை ஆரம்பிக்கப்பட்டு ஒருவார காலத்திலேயே குத்தகை தாரர்கள் இவ்வாறு நடந்துகொள்வதனால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.