கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலராக கடைமையாற்றிய மனோகரன் பிரதீப் அவர்கள் மன்னார் பிரதேச செயலாளராக நேற்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மாத்தளை ரத்தோட்டை பிரதேச செயலகத்தில் கடந்த இரண்டு வருடங்கள் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி அதன்பின் நான்கு வருடங்கள் கிளி.கண்டாவளை உதவி பிரதேச செயலாளராக சேவையாற்றி வந்துள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பின் இடம்பெற்ற அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தின் அடிப்படையில் தற்போது மன்னார் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.