ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து நேற்று 176 பேருடன் பயணித்த உக்ரேனிய விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெஹ்ரான் விமான நிலையத்துக்கு அருகே விமானம் வீழ்ந்து நொறுங்கியது.
விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளில் 82 ஈரானியர்கள், 63 கனேடியர்கள் , 11 உக்ரைன் விமான பணியாளர்கள் , 10 சுவீடன் பிரஜைகள், 4 ஆப்கானிஸ்தான் பிரஜைகள் , 03 ஜேர்மன் பிரஜைகள் , 03 இங்கிலாந்து பிரஜைகள் பலியாகியுள்ளதாக , உக்ரேனிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விமானத்தின் தகவல்கள் பதிவாகியுள்ள இரண்டு கறுப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.