யாழ்ப்பாண மக்களின் எரிபொருள் பதுக்கல்!!

2 1
2 1

அமெரிக்கா – ஈரான் இடையே தோன்றியுள்ள போர்ப்பதற்றம் காரணமாகவும், எண்ணெய் வளம் கொண்ட வளை குடா நாடுகளில் தோன்றியுள்ள பதற்றம் காரணமாகவும் எாிபொருளுக்கு தட்டுப்பாடு வரலாம் என பரவலாக பேசப்படுகின்றது.


இதனை காரணமாக வைத்துக்கொண்டு யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளனர் .


இதன் காரணமாக குடா நாட்டில் இருக்கும் அனைத்து ஏரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெரிய அளவிலான கொள்கலன்களை வரிசையில் வைத்து வெயிலில் காத்திருந்து எரிபொருட்களை பதுக்க தீர்மானித்துள்ளனர் .


வரிசையில் நிற்கும் மக்களுக்கு இது அவசியமற்ற செயற்பாடு என தெரிவிக்காத எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தமது கையிருப்பை விற்று தீர்க்கின்றனர் .


மக்களின் இந்த தேவை அற்ற பயத்தை போக்க எந்த அரசியல்வாதிகளும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் பேசி மக்களுக்கு சரியான பதிலை இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.