பிரபாகரனின் உறவினருக்கு சிறையில் மதுபானம் – ஓய்வுபெற்ற அதிகாரியால் கசிந்த ரகசியம்

9 cd
9 cd

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினரான சாள்ஸ் ஞானகோனுக்கு சிறைச்சாலையில் அறையொன்றை வழங்கி மதுபானம் அருந்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக முன்னாள் ஓய்வுபெற்ற இரகசியப் பொலிஸ் அதிகாரியினால் தகவல் கசிந்துள்ளது.

சாள்ஸ் ஞானகோனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லையெனத் தெரிவித்து, அவரை விடுதலை செய்துள்ளதாகவும் இந்த ஓய்வுபெற்ற அதிகாரி குறிப்பிட்டுள்ளார் .

அவரது அறைக்கு விஸ்கி ரக மதுபான போத்தல் வழங்கப்பட்டமை தொடர்பில் இதுவரை எந்தவித விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் தெரியவந்துள்ளது.