காத்தான்குடியிலிருந்து விநியோகமாகும் போதைப்பொருட்களும், பின்னடையும் தமிழ் சமூகமும்

drugs
drugs

அன்மைக் காலமாக மட்டக்களப்பில் அதிகரித்துள்ள போதைப்பொருள் தொடர்பான ஆய்வொன்றை சமூக ஆர்வலர் ஒருவர் மேற்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில் மட்டக்களப்புப் பகுதின் மிக முக்கியமான பூநொச்சுமுனை நாவற்குடா பகுதியில் வாழும் இளைஞர்கள் காத்தான்குடி பகுதியில் இருந்து விநியோகமாகும் போதைப்பொருள் மற்றும் நரம்பியல் மாத்திரைகளுக்கு அடிமையாகி சிக்கி தவிக்கின்றனர். மாலை நேரங்களில் அப்பகுதியில் போதைப்பொருள் பாவனை செய்யும் இளைஞர்களை வீதியில் காணக் கூடியதாக உள்ளது. இவர்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. இதனை போதைப்பொருளுக்கு எதிரான அமைப்புக்கள் கவனித்து இதற்கெதிரான திட்டங்களை வேகமாக களத்தில் முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழர்களின் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனுடாக தமிழரை தோல்வியடையச் செய்து காணிகளையும் இடங்களையும் கைப்பற்றும் நோக்கமாகவே இதனைப் பார்க்க வேண்டி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.