நாளை கொழும்பை அண்டிய பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு

2 rf
2 rf

வத்தளை, களனி மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 13ஆம் திகதி 24 மணி நேர நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணியிலிருந்து நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

பேலியகொடை, வத்தளை, மாபொல நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

களனி பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெந்தல, எலக்கந்த மற்றும் பள்ளியவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
பியகம பிரதேச சபைக்கு உட்பட்ட மகுருவில வீதி, விஜேராம மாவத்தை, கே.ஈ. பெரேரா மாவத்தை, கோணவல, பமுணுவில மற்றும் பதலஹெனவத்த ஆகிய பகுதிகளிலும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சபை மேலும் அறிவித்துள்ளது.