வென்னப்புவ – போலவத்தை பகுதியில் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த கஞ்சா பயிர்செய்கை காவல் துறை விசேட அதிரடிபடையினரால் இன்று(13) முற்றுகையிடப்பட்டுள்ளதோடு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 50 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஐந்து மாத கஞ்சா செடிகள் 463, சிறிய செடிகள் 300, நாற்றுமேடையில் காணப்பட்ட 100 நாற்றுக்கள் ஆகியன இதன்போது முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனமல்வில பகுதிக்கு விற்பனை செய்வதற்காக குறித்த கஞ்சா பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.