நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இம்மாதம் 29ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் வசந்த குமாரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய தொலைபேசி ஒலிப்பதிவுகள் தொடர்பில் நேற்று மாலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.