மட்டக்களப்பில் வருகின்றகிழமை 1500 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது, அதில் 700 வேலைவாய்ப்புக்கள் என்னால் வழங்கப்படவுள்ளன. என நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டகளப்பு – புதுக்குடியிருப்பு சுடர் விளையாட்டு கழகத்தின் தைப்பொங்கல் விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார் .
நான்கு வருடம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து என்னால் 21 பேருக்கு மாத்திரமே வேலையினை பெற்றுக்கொடுக்க முடிந்தது.
ஆனால் இப்போது 45 நாள்தான் ஆகின்றது என்னால் 700 பேருக்கு வருகின்ற கிழமை வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த 700 பேருக்கு வேலைவாய்ப்பினை நான் கூட்டமைப்பில் இருந்து வழங்க விரும்பினால் 250 வருஷம் உயிரோடு இருந்திருக்க வேண்டும். அத்தோடு க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைய தவறியவர்கள் 1500 பேருக்கு மட்டக்களப்பில் வருகின்ற கிழமை வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதனால் 1500 குடும்பங்களில் விளக்கெரியும் என மேலும் தனது உரையில் குறிப்பிட்டார்.