ராஜிதவிற்கெதிரான சீராய்வு மனு விசாரணை இன்று

rajitha mp
rajitha mp

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவுக்கு பிணை வழங்கியமை தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, பிணையில் வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறு மேல்நீதிமன்றத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி, ராஜித சேனாரட்ன கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், கடந்த 30ம் திகதி, கொழும்பு பிரதான நீதிவான் பிணை அனுமதியை வழங்கினார்.