பொங்குதமிழ் பிரகடன 19ம் ஆண்டு நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று (17) நடைபெற்றது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 2001ம் ஆண்டு பொங்கு தமிழ் நடாத்தப்பட்டது.
இதன் போது தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமென பிரகடனம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த பிரகடனத்தின் 19வது ஆண்டான இன்று அந்த பிரகடனம் நிறைவேற்றப்பட வேண்டுமென மாணவர்களால் மீள் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக துறைசார் தரப்பினர்கள என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.