ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் 2022 ஆம் ஆண்டின் பின்னர் கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஹர்ச டி சில்வா எம்.பி. தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
2025 இன் பின்னர் தான் தேர்தலில் போட்டியிடுவதில்லையென அவர் அறிவித்ததாகவும் ஹர்ச டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.