நெல்லின் விலை நிர்ணயம், நிறை நிர்ணயம் பற்றி ஆராய்வு

IMG d8e1dc04d9044c5d4e86b027b5bb38c9 V
IMG d8e1dc04d9044c5d4e86b027b5bb38c9 V

நெல்லின் கொள்வனவு விலை, நிறை நிர்ணயம் என்பவற்றை தீர்மானிப்பது தொடர்பில் நேற்று (20) நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

முல்லை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தலைவர் சதாசிவம் கனகரத்தினம் தலைமையில் மாவட்ட செயலாளரின் ஒழுங்குபடுத்தலில் நேற்று மாலை 2.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள்,கமநல சேவை திணைக்களத்தின் அதிகாரிகள், கூட்டுறவு உதவி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் கொள்வனவு செய்யப்படும் நெல்லை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்வதாகவும் அதற்கான கடன் வசதிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இரண்டு தினங்களில் மீண்டும் ஒரு கூட்டத்தை கூடி விலை நிர்ணயம், நிறை நிர்ணயம் தொடர்பாக ஆராய்வதாகவும் முடிவெடுக்கப்பட்டது.