நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்தொடர் இன்று

parliament
parliament

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நியமிக்கப்பட்ட 17 உறுப்பினர்களும், சபாநாயகர் கரு ஜெயசூர்ய தலைமையிலான இன்றைய முதலாவது கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள 17 உறுப்பினர்களையும், சபாநாயகர் இன்று (21) உத்தியோகபூர்வமாக அட்டவணைப்படுத்துவார்.

பொது நிறுவனக் குழு (கோப்) மற்றும் பொதுக் கணக்குகளுக்கான குழு (கோபா) உள்ளிட்ட குழுக்களுக்கான உறுப்பினர்களே இவர்கள் ஆவர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபாலா டி சில்வா, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த சமரசிங்க, காமினி லொக்குகே, மஹிந்த யபா அபேவர்தன, ரிஷாத் பதியுடீன், பட்டலி சம்பிக ரணவக்க, மனோ கணேசன், நிரோசன் பெரேரா, மாவை சேனாதிராசா ஆகியோரோ குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் முதல் கூட்டம் இன்று மாலை 3.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.