பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் பாடல்கள் இசைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக 50 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் செயல்படத்தக்க வகையில் 250 உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் பாடல்களை இசைப்பது தொடர்பில் 1955 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது