மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளின் அனைத்து வட்டாரங்களிலும் சமமான அபிவிருத்திப் பணிகளை மாநகரசபை முன்னெடுத்து வருவதாக இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்
மட்டக்களப்பு மாநகரசபையில் எந்த அரசியல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் அபிவிருத்தி பணிகள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும்
பங்கீடானது மாநகரசபையினால் முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தின் அடிப்படையிலேயே பங்கீடு இடம்பெறுவதாகவும் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டே அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருதாகவும்
மாநகரசபையினால் வட்டார ரீதியாகவே அபிவிருத்திகளை செய்ய முடியும் எனவும் மாநகர சபையின் சில உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சுக்கள் ஊடாக தமது பகுதிக்கான வேலைத்திட்டங்களுக்கு நிதிகளை கொண்டுவந்து அபிவிருத்திகளை செய்யும்போது அதற்கு மாநகரசபை ஆதரவுகளை வழங்குகின்றது என தெரிவித்துள்ளார்.