இறுதிப்போரில் பாகிஸ்தான் இலங்கைக்கு உதவியமைக்கு மகிந்த நன்றி!

0 ee
0 ee

பாகிஸ்தானின் கடற்படை பிரதம அதிகாரி அட்மிரல் ஸாபார் மஹ்முத் அப்பாஸி பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் நேற்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான படை ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இறுதிப்போரின்போது பாகிஸ்தான் இலங்கைக்கு உதவியமை குறித்து மஹிந்த ராஜபக்ச நினைவுப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை கிரிக்கட் அணி கடந்த டிசம்பரில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தமைக்கு பாகிஸ்தான் படையதிகாரி நன்றி தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணியின் மீது லாகூரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் அதே அணி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து தமது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ததாக பாகிஸ்தான் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.