இலங்கையில் முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு

mask
mask

முகக்கவசங்களை துரிதமாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், முகக்கவசங்களின் உற்பத்தியையும் துரிதப்படுத்துமாறு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனவே, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான நோயாளர் ஒருவர் இலங்கைக்குள் இனங்காணப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் முகக்கவசங்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.