வெட்டிக் கொல்லப்பட்ட பா.ஜ.க நிருவாகியின் குடும்பத்திற்கு ஐம்பதாயிரம் நிதியுதவி

vijaya raghu
vijaya raghu

திருச்சியில் கொல்லப்பட்ட பாஜக நிருவாகி விஜயரகுவின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் இன்று 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளரான விஜயரகு நேற்று முன்தினம் (27) வெட்டி கொல்லப்பட்டார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய கொலையாளிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று திருச்சி சென்று, விஜயரகுவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாஜக சார்பில் விஜயரகுவின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியை, அவரது மனைவியிடம் வழங்கினார்.