கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மந்திரத்தை சொல்லும் தலாய் லாமா

thalai lama
thalai lama

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை சொல்லுமாறு திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவில் உள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்கும்படி திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

அதற்கமைய மேற்குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிப்பதனால் மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபடலாம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும், என தலாய் லாமா தெரிவித்தார்.

மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவும் இந்த வைரசுக்கு சீனாவில் இதுவரை 106 பேர் உயிழந்துள்ளனர். மேலும், 4515 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.