சம்பிக்க ரணவக்கவின் சாரதியிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு

champika ranavakka1
champika ranavakka1

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமாரவிடம் இன்று (29) சுமார் ஒரு மணித்தியாலம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நேரஞ்சனா டி சில்வாவின் உத்தியோகபூர்வ அறையில் இந்த இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமார என்ற சந்தேகநபர் கடந்த 06 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.