ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘நாட்டை அலங்கரித்து, அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் நிந்தவூர் மல்பெறி கைஸ் அமைப்பினரின் முயற்சியினால் வரையப்பட்ட ஓவியங்களை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (29) நிந்தவூர் பிரதான வீதியில் இடம் பெற்றது.9
நிந்தவூர் மல்பெறி கைஸ் அமைப்பின் தலைவர் ஏ.எச்.எம்.பாஸீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான சட்டத்தரணி.ஏ.எல்.றியாஸ் ஆதம், ஏ.அஸ்வர் ஆகியோரும், இளைஞர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்றைய நிகழ்வின் போது வீதியினால் போக்குவரத்துச் செய்த அனைத்துப் பிரயாணிகளுக்கும் மல்பெறி கைஸ் அமைப்பினரின் ஆதரவில் இலவசமாக கூழ்கழி (Ice Creem ) வழங்கப்பட்டது.
மேலும் இவ்விளைஞர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் நல்ல முயற்சிகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவு வழங்கப் போவதாகத் தெரிவித்தனர்.