முகக் கவசத்தை அணியுமாறு அரசாங்கம் வலியுறுத்தவில்லை – உயர்கல்வி அமைச்சர்

bandula gunawardana4
bandula gunawardana4

கொரோனா வைரஸ் குறித்து பரவும் பொய்யானத் தகவல்களால் மாணவர்கள் முகக் கவசத்தை அணியுமாறு அரசாங்கம் வலியுறுத்தவில்லை என உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று முன்தினம் (28) பிரதமர் தலைமையில் அமைச்சுக்களுடனான முக்கிய கலந்துரையாடலில் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதி குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய, சுற்றுநிருபம் ஒன்று பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சோ, சுகாதார அமைச்சோ முகக் கவசத்தை அதிக விலை கொடுத்து வாங்கி அணியுமாறு மாணவர்களுக்கோ மக்களுக்கோ ஆலோசனை வழங்கவில்லை என தெரிவித்தார்.