கொழும்பில் களமிறங்குகிறார் மொஹமட்!

8 wn
8 wn

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், எம் .எஸ் .எச்  மொஹமட் போட்டியிடவுள்ளதாக நம்பகரமான உயர் அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்தது.

இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை அண்மையில் நடந்துள்ளது.
இதில் பசில் ராஜபக்ஷ சார்பு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

களத்தில் குதிக்க மொஹமட் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கொழும்பில் சுதந்திரக் கட்சி சார்பில், பைசர் முஸ்தபாவும் தேர்தலில் களமிறங்கவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.