திருக்கேதீஸ்வர ஆலய வளைவிற்கு விரைவில் தீர்வு!

44
44

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கான வளைவு அமைப்பதில் உள்ள பிரச்சினை தொடர்பில் மகா சங்கத்தினர், மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால தெரிவித்துள்ளார்.

பௌத்த, இந்து ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு நாள் மாநாடு இன்றையதினம் (30) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய
சிவபூமி அறக்கட்டளை தலைவர் திருமுருகனின் கோரிக்கைக்கமைய இது தொடர்பில் சுமுகமான தீர்வினை பெற்றுத் தருவதாக ஜெகத் சுமதிபால தெரிவித்துள்ளார்.