வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (01)காலை 7.00 மணிமுதல் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பதிவு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.
திடீரென அமைக்கப்பட்ட இச் சோதனைச் சாவடி காரணமாக குருமன்காட்டு சந்தியில் மக்கள் ஒருவித அச்சத்துடன் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊடகவியலாளர்கள் சோதனை நடவடிக்கையினை புகைப்படம், காணொளி எடுப்பதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர் .
எனினும் தொழிநுட்பத்தினை பயன்படுத்தி புகைப்படங்கள், காணொளிகள் மீள பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.