ஊழல் மோசடி நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை!

3
3

ஊழல் மற்றும் மோசடியான நபர்களை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதால் அப்படியான நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படக் கூடாது என மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

ஊழல் மற்றும் மோசடியான நபர்கள் அல்லாத அதிகமானவர்கள் மக்கள் விடுதலை முன்னணியிலேயே இருப்பதாகவும் அவர் இதனை கூறியுள்ளார்.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, மாநாயக்கரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் மீது மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்காதப்படியான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.