தமிழ், சிங்கள மக்களைப் பிரித்து தூரமாக்கும் அரசு!

1 qw
1 qw

ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ், சிங்கள மக்களைப் பிரித்து அவர்களைத் தூரமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க வேண்டாம் என இந்த அரசு கூறுகின்றது என்றால் அது வெறுமனே தமது வெற்றியை தக்கவைத்து கொள்ள சிங்கள மக்களை தம்வசம் வைத்திருக்க செய்யும் சூழ்ச்சியாகவே நாம் கருதுகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் கடந்த கால சூழலை மீண்டும் நினைவுப்படுத்தவா தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதை ராஜபக்ச அரசு தடுக்கின்றது என்ற கேள்வியும் தற்போது எழுகின்றது.

இன்று இனவாதக் கருத்துக்களை மட்டுமே இந்த அரசு பரப்பி வருகின்றது. எமது ஆட்சியில் சகல மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை அமைத்துக் கொடுத்தோம்.

ஆனால், ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் இனவாத அரசியலைச் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படக் கூடாது என அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால், எமது ஆட்சியில் அவ்வாறு எந்தவொரு தடையையும் நாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக செய்யவில்லை.

சிங்கள மக்களும் அவ்வாறு தனித்துவமான நிலைமைகளை எதிர்பார்க்கவும் இல்லை. நாம் சிங்கள – தமிழ் மக்களை நெருக்கமாக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.