ரணிலையோ, மைத்திரியையோ நாம் ஆதரிக்கவில்லை – இரா. சம்பந்தன்

0 o
0 o

ரணிலையோ ,மைத்திரியையோ நாம் ஆதரிக்கவில்லை ஒரு கொள்கையை ஆதரித்தோம் என முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா .சம்பந்தன் தமிழ்குரல் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார் .

நாம் ரணில் விக்கிரமசிங்கவை மைத்திரியை அவர்களின் நிலையை எமது தேவையான நிலைப்பாட்டை ஆதரித்து ஆட்சியை ஏற்படுத்திய பின் அந்த ஆட்சியை தக்கவைக்க நாம் உறுதுணையாக இருப்பது எமக்கு தேவையாக இருந்தது.


ரணில் – மைத்திரி ஆட்சிக்காலத்தில் காணி விடுவிப்பு,அரசியல் கைதிகள் விடுவிப்பு ,மீள்குடியேற்றம் ,புனர்வாழ்வு ஆகியவற்றில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் ஏற்பட்டது.

ஆனால் அதற்குமுன்னர் ஆட்சியில் எத்தனை கொடுமைகள் நடந்தன அதனை தொடர்ச்சியாக ஆதரிக்க முடியாது ,நாடாளுமன்றத்தில் நம் ஆதரவை எப்படி வழங்கவுள்ளோம் என்பதை இனி நாம் தீர்மானிக்க வேண்டியுள்ளது .

ஒரு கொடூர ஆட்சியில் நாம் எதனையும் பெறமுடியாது என தமிழ்க்குரல் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார் .