சீன நாட்டவர்கள் – அஸ்கிரிய பீடம் அறிவிப்பு!

6 hyg
6 hyg

இலங்கையில் வாழும் சீன நாட்டவர்களை தயவுடன் நடத்துமாறும், தேவை ஏற்படுமாயின் அவர்களுக்கு உதவிகளை வழங்குமாறும் அஸ்கிரிய பீடம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

குறித்த அறிவிப்பை அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அங்கு 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் பெருமளவான சீன நாட்டவர்கள் இருக்கின்ற நிலையில், இலங்கையிலும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நாட்டு மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதனால், சீன நாட்டவர்களை இலங்கை மக்கள் பெரும் அச்சத்துடனேயே பார்க்கின்றனர். இவ்வாறான நிலையிலேயே, அஸ்கிரிய பீடம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.