கொடுப்பனவை மறுத்த, வுஹான் சென்ற ஶ்ரீலங்கன் பணியாளர்கள்!

8 w
8 w

வுஹானில் இருந்த இலங்கையர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஶ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்கள் தமது சேவைக்கான கொடுப்பனவை பெற பணிவுடன் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

 
அவர்கள் தமது விமான சேவைக்கான கொடுப்பனவை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை பெற்றுக் கொள்வதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.