எரிந்த நிலையில் சடலம் மீட்பு ; தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

022
022

திருமலையில் பாரவூர்தியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு ; தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது
திருகோணமலை-பாலம் போட்டாறு பகுதியில் பாரவூர்தியின் உதவியாளரை தீ மூட்டி கொலைசெய்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த சாரதியை மன்னாரில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் (47 வயது) எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை அவரது மனைவியான கௌரி மனோகரி (37 வயது) என்பவரையும் தம்பலகாமம் பொலிசார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.