ரஞ்சன் மீது கல்லெறிய வேண்டும் – வஜிர அபேவர்தன

1 d
1 d

யார் என்ன கூறினாலும் ரணில் விக்ரமசிங்க உயிருடன் இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க போவதில்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி, பலப்பிட்டியவில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு தெளிவுப்படுத்தும் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தமது தலைவரை விமர்சிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றேன்.கட்சித் தலைவரை விமர்சிப்பது தமது தாய், தந்தையை விமர்சிப்பதை போன்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு செய்த அநியாயத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது கல்லெறிய வேண்டும். இவர்களை போன்றவர்களை அருகிலும் சேர்க்கக் கூடாது எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.